கடலை என்பது எந்தவித கருத்தோ அல்லது பொருளோ காரியமோ இன்றி ஒரு குறிபிட்ட எல்லைக்குள் பேச்சை அடைக்காமல் நமது மனதுக்குள் தோன்றியதை இஷ்டம் போல் அள்ளி விடுவதே கடலை ஆகும்.
இக்கடலையாகபட்டது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து செய்வது. இதை ஒரு ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது.. அதற்கு இச்சமூகம் வெட்டி அரட்டை என்று பெயர் வைக்கிறது.
இன்னொரு நண்பர் மாதம் 1000 ரூபாய் வரை மொபைல்-க்கு பணம் கட்டுகிறார்.. எல்லாம் கடலை செயல்..
இவ்விஷயத்தில் பெண்கள் மிகவும்

கெட்டிகாரதனமாக மாதந்தோறும் 20000 sms-கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர்..
அதைத்தவிர மினிமம் பாலன்ஸ் மெயின் டைன் செய்து missed call மங்கைகளாகவும் திகழ்கிறார்கள்..இதனால் அவர்களுக்கு பொருள் இழப்பு அதிகமில்லை. இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிகிறது.
நேரில் கடலை போட அசாத்திய திறமை வேண்டும். போன்-நிலோ அல்லது மெசேஜ் அல்லது சாட்டிங் என்றால் பிரச்சனை இல்லை.
நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில வினாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரில் அது கிடையாது, அதற்காக நீங்கள் சமயோசிதமாக இருக்க வேண்டும். அவை கடலை போட தானாகவே கை கூடும். இல்லைஎன்றால் விடுங்கள்.. வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள்.
இருந்தாலும் நமது சிறிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்து கொண்ட சில குறிப்புக்கள்:
சிறப்பாக கடலை போட சில வழிகள்:
1. நேரில் பேசும் போது கண்ணை பார்த்து பேசவும். அதிகம் வழியாதீர்கள். அல்லது கைக்குட்டை வைத்துகொள்ளவும்.
2. பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கு P.S.வீரப்பா போல சிரிக்கவும். சாகும் வரை சிரிக்க முயலுங்கள். அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்-ஏ சொல்லமாட்டார்.
3. அடிக்கடி ஆக்சுவல்லி என்ற வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்துக்கு உதவும்). ஆக்சுவல்லி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்த படித்த கணவான் என்று எண்ணக்கூடும்.
4. பேசும்போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும். (காது குடைவது, மூக்கு நோண்டுவது போன்றவை)
5. அடிக்கடி உங்களை பற்றி பீத்திகொள்ளாதீர்கள். அதை பூடகமாக செய்யவும்.
6. எந்தஒரு கட்டத்திலும் "அப்புறம்" என்று சொல்லி விடாதீர்கள். அது கடலையை உடனே நிறுத்தி விடும்.

குறிப்பு: என் அருமை நண்பர் அஹ்மெத் அனுப்பிய மின்னஞ்சலின் தழுவல்.