Saturday 15 August 2009

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.



அன்பு நண்பர்கள் அனைவருக்கும்
எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...!!!


யாதும் ஊரே..!! யாவரும் கேளீர்...!!!

Sunday 9 August 2009

கடலை சொற்பொருள் விளக்கம்

டலை என்பது எந்தவித கருத்தோ அல்லது பொருளோ காரியமோ இன்றி ஒரு குறிபிட்ட எல்லைக்குள் பேச்சை அடைக்காமல் நமது மனதுக்குள் தோன்றியதை இஷ்டம் போல் அள்ளி விடுவதே கடலை ஆகும்.

இக்கடலையாகபட்டது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து செய்வது. இதை ஒரு ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது.. அதற்கு இச்சமூகம் வெட்டி அரட்டை என்று பெயர் வைக்கிறது.

இன்னொரு நண்பர் மாதம் 1000 ரூபாய் வரை மொபைல்-க்கு பணம் கட்டுகிறார்.. எல்லாம் கடலை செயல்..

இவ்விஷயத்தில் பெண்கள் மிகவும் கெட்டிகாரதனமாக மாதந்தோறும் 20000 sms-கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர்..

அதைத்தவிர மினிமம் பாலன்ஸ் மெயின் டைன் செய்து missed call மங்கைகளாகவும் திகழ்கிறார்கள்..இதனால் அவர்களுக்கு பொருள் இழப்பு அதிகமில்லை. இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிகிறது.
நேரில் கடலை போட அசாத்திய திறமை வேண்டும். போன்-நிலோ அல்லது மெசேஜ் அல்லது சாட்டிங் என்றால் பிரச்சனை இல்லை.

நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில வினாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரில் அது கிடையாது, அதற்காக நீங்கள் சமயோசிதமாக இருக்க வேண்டும். அவை கடலை போட தானாகவே கை கூடும். இல்லைஎன்றால் விடுங்கள்.. வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள்.

இருந்தாலும் நமது சிறிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்து கொண்ட சில குறிப்புக்கள்:

சிறப்பாக கடலை போட சில வழிகள்:

1. நேரில் பேசும் போது கண்ணை பார்த்து பேசவும். அதிகம் வழியாதீர்கள். அல்லது கைக்குட்டை வைத்துகொள்ளவும்.

2. பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கு P.S.வீரப்பா போல சிரிக்கவும். சாகும் வரை சிரிக்க முயலுங்கள். அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்-ஏ சொல்லமாட்டார்.

3. அடிக்கடி ஆக்சுவல்லி என்ற வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்துக்கு உதவும்). ஆக்சுவல்லி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்த படித்த கணவான் என்று எண்ணக்கூடும்.

4. பேசும்போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும். (காது குடைவது, மூக்கு நோண்டுவது போன்றவை)

5. அடிக்கடி உங்களை பற்றி பீத்திகொள்ளாதீர்கள். அதை பூடகமாக செய்யவும்.

6. எந்தஒரு கட்டத்திலும் "அப்புறம்" என்று சொல்லி விடாதீர்கள். அது கடலையை உடனே நிறுத்தி விடும்.


குறிப்பு:
என் அருமை நண்பர் அஹ்மெத் அனுப்பிய மின்னஞ்சலின் தழுவல்.

Wednesday 5 August 2009

வேண்டாம் வெளிநாடு

எல்லாரும் வெளிநாட்டுக்கு போய் கை நிறைய சம்பாதிக்கனும், குடும்பத்த காப்பாத்தனும் -னு நினைக்கிறோம்.. அப்படி வெளிநாட்டுக்கு போய் கஷ்டப்படரவுங்க தான் அதிகம்..

முறையான விசா இல்லாம ஏஜென்ட்-க்கு லச்ச லச்சமா கொடுத்து வெளிநாட்டுல போய் மாட்டிகிறாங்க நம்பாளுங்க.. வெற்றி கொடிகட்டு படம் மாதிரி இன்னும் நடந்துகிட்டு தாங்க இருக்கு,..

அதுலயும் முக்கியமா அரபு நாடுகளுக்கு போய் மாட்டுனா அவ்ளவுதான்.. ஒட்டகம் மேய்க்க விட்ட்ருராங்கே.. மாசம் 10000 ரூபாய் சம்பளம்.. தங்க ஒரு தொழுவம் மாதிரி ஒரு இடம், சாப்பிட குப்பூஸ் (பராத்தா மாதிரி இருக்கும்-ங்க.. 20 வருஷமா இது ஒன்னு தான் வில ஏராமா இருக்கு.. நம்ப ஊரு காசுக்கு ரூ 2) . இதான் வாழ்கை. நம்பாளுங்க ஊருக்குள்ள வாங்குன கடன அடைக்கவே ஒரு வருஷம் ஆகிடும்..அதன் பின் சேமிப்பு காலம். எப்படியும் குறைஞ்சது 5 வருஷம் இருக்காங்க.. சிறை வாசம் மாதிரி தான்..

சில பேர் வெயில் தாங்க முடியாம இறந்து கூட போயுடறாங்க.. அப்படி இறந்தா அவங்களோட உடல ஊருக்கு அனுப்பாம, அங்கயே அடக்கம் செஞ்சிடறாங்க..

இன்னும் பல பேர், மனநலம் பாதிக்கப்பட்டு ஊருக்கு திரும்பி வராங்க..

அப்படி கஷ்டப்பட்டு, இன்னல்பட்டு ஊருக்கு வரதுக்குள்ள பாதி வாழ்கை போயிடுது..

இந்த சுவாரசியமான கதைய படிங்க.. இவரும் ஒரு உதாரணம்.




Image-யை save செய்து படிக்கவும்..

இப்படி
வெளிநாடுகள்ள கஷ்டபடரவுங்க மட்டும் 2500 தமிழர்கள் இருக்காங்கலாம். ஏன் இப்படி எல்லாரும் கஷ்டப்படறாங்க-னு கூட நினைக்க தோணும். இதுக்கு ஊர்லயே இருகலாமே-னு கேக்க தோணும்..

ஹ்ம்ம்... மனுச பிறவியா பிறந்துடோமே.. வாழ்ந்து தான் ஆகணும்..

Saturday 1 August 2009

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..