Thursday 16 July 2009

வானிலை (தடு)மாற்றம்.!


கத்திரி வெயில் முடிஞ்சும் இன்னும் இந்த வெயிலோட தாக்கம்குறைஞ்சபாடில்லை.

இதுனால எவ்ளோ பிரச்சனைகள் நமக்கு.. தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரஉற்பத்தி பாதிப்பு, காய்கறிகள் தானியங்களின் விளைச்சல் பாதிப்பு, விலைவாசிஉயர்வுனு சொல்லிகிட்டே போகலாம்.

உலகம் அழியப்போகுதுனு எல்லாரும் பீதிய (?) கிளப்புறாங்களே, அதுஉண்மையா போயுருமோனு கூட சந்தேகம் வருது.

எதுனால இப்டி இருக்குனு தெரிஞ்சிக்கலாம்னு வலைல விழுந்தேன்.



தட்பவெப்ப நிலை மாற்றத்த இரண்டு வகை காரணங்களா பிரிக்கலாம்.

1. இயற்கையான காரணங்கள்

2. மனிதனால் ஏற்படும் காரணங்கள்

வெப்பநிலை மாற்றங்களுக்கு நிறைய இயற்கையான காரணங்கள் உள்ளன. கண்டங்களின் விலகல், எரிமலைகள், கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிசரிவுஇதற்கான சில முக்கிய காரணிகள்.

இப்ப நம்ப இரண்டாவது காரணத்துக்கு வருவோம். நம்பாளுங்க தான் எதுனாலும்முதல்ல வந்துருவாங்களே. இருக்கிற ஊர சிங்காரமா ஆக்குரேனு மரத்தவெற்றது, Special Economic Zone உருவாக்குரோம்னு விவசாய நிலைத்தஅழிக்கிறது, நிலக்கரி பெட்ரோல் டிசெல்னு பயன்படுத்ரனால நமக்கே தெரியாமநாம அழிஞ்சு போய்ற்றுகோம்ங்கறது மறைக்க முடியாத உண்மை.

"வீட்டுக்கு ஒரு மரம் வளர்போம்"-னு எனக்கு விவரம் தேரிஞ்சதுலேந்து அரசுசொல்லிட்டுதான் இருக்கு. அரசும் அப்ப அப்ப "ஒரு லச்சம் மரகன்றுகள்நடுவிழா"-னு சொல்லி மரத்த நடராங்கலே தவிர அத பாதுகாக்ரதில்ல. அரசோடஅறிக்கைகள் வெறும் அறிக்கைகளாகவே இருந்துட்டுருக்கு.

கடந்த 1969ம் ஆண்டு முதல் 2006 வரையிலான ஆண்டுகளில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெப்ப நிலை எப்படி இருந்தது என்பது குறித்துசென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்தது

மார்ச் மாதம் 32 டிகிரியா ஆரம்பிக்கும் கோடை காலம் 38 டிகிரி வரைக்கும்இருக்குமாம்.

ஆனா 2009ம் ஆண்டு சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் மற்றொருஆய்வறிக்கையை வெளியிட்டது.

மார்ச் மாதம் 35 டிகிரியா ஆரம்பிக்கும் கோடை காலம் 42 டிகிரி வரைக்கும்இருக்காம்.

இன்னமும் நம்ப ஊர்ல அசோகர் நட்ட மரங்களதான் பாக்க முடியுது. இப்படியேபோச்சு-னா நமக்கு பின்னால வரும் சந்ததிகளுக்கு மரங்கள பாட புத்தகத்துலபடமா தான் பாக்க முடியும்.

மரம் வளர்ப்போம்.. உயிர் கொடுப்போம்.

No comments: