Monday 20 July 2009

மைக்கேல் ஜாக்சன் வாழ்கையில் நிகழ்ந்த பெரிய விபத்து

யுஎஸ் வீக்லி என்னும் பத்திரிகை இது வரை வெளிவராத ஒரு வீடியோ காட்சியை தற்போது வெளிட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று பெப்சி நிறுவனத்திற்காக ஒரு விளம்பர படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஜாக்க்சனை சுற்றி பட்டாசுகள் வெடிக்க, படிகளில் இறங்கி வந்து நடனம் ஆடுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது. பல முறை படப்பிடிப்பு நடத்தியும் சரியாக வராததால் மீண்டும் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆறாவது முறையாக படம் பிடிக்கப்பட்டபோது பட்டாசுகள் குறுப்பிட்ட நேரத்திற்கு முன்பே வெடித்து விட்டன.ஜாக்சனின் தலையிலும்,முகம்,உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன.தலையில் தீப்பிடித்து எரிந்தது சில வினாடிகள் பின்பே ஜாக்சனுக்கு தெரிந்தது.அதற்குள் பெரும்பாலான முடிங்கள் கருகி விட்டன.உடன் படப்பிடிப்பு குழுவினர் விரைந்து தீயை அணைத்து ஜாக்சனை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.இந்த விபத்து காரணமாக பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டி வந்தது.அதற்காக வலி நிவாரணிகளை அதிக அளவு எடுத்து பின்னர் அதற்கே அடிமையாகும் நிலை ஏற்பட்டது.இதுவரை ஒன்றிரெண்டு புகைப்படங்கள் மட்டுமே இந்த விபத்து பற்றி வெளிவந்துள்ளது.



இப்போது தான் முதன் முறையாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.பெப்சி நிறுவனம் நஷ்ட ஈடாக 1.5 மில்லியன் டாலர்களை ஜாக்சனுக்கு கொடுத்தது. அதை அவர் தொண்டு நிறுவனத்திற்கு அவர் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால்......

3 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

Ada.. This is a new news ..

கார்த்திக் said...

// Ada.. This is a new news ..

நன்றி தோழரே..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்க்கை..... வாழ்க்கை....,